Wednesday, April 27, 2022

6 Best Practices for Building Healthy Relationships

6 Ways to Make Your Relationships Stronger

Gurudev Sri Sri Ravi Shankar 

#1 Let Go of Control

Many have a problem with letting go of control. This results in anxiety and restlessness, and it sours relationships.


Wake up and see, are you really in control? What are you in control of? Perhaps a tiny part of your waking state!

• You are not in control when you are sleeping or dreaming.

• You are not in control of thoughts and emotions coming to you.

Similarly, do you think you are in control of all the events in your life or in the world? When you look at things from this angle, you need not to be afraid of losing control because you have none!

#2 Have a Sense of Reverence

Whatever you revere becomes bigger than you. When you have reverence in your relationships, then your own consciousness expands. Then even small things appear to be significant and big. Every little creature appears to be dignified. It is the reverence in every relationship that saves the relationship.

Often you do not have reverence for that which you own, and losing that reverence happens unconsciously. Reverence in ownership frees you from greed, jealousy, and lust. Cultivate the skill of having reverence every moment in your life.

#3 Have Common Goals

When two lines move parallel with each other, they can go on together forever. But when the two lines are focused on each other, then they cross and go away from each other. The same is true with relationships. When both partners have a common goal in life, that makes their relationship last longer and brings more harmony. But when they are focused on each other, then they pick on each other; they love and hate, and all the fights happen.

#4 Annihilate Conflict

When you are in a harmonious environment, your mind picks up any excuse to be in conflict. Often small things are enough to create a big turmoil. Have you noticed this?

When your survival is at stake, you don't complain that nobody loves you. But when you are safe and secure, you start demanding attention. Many people create conflict in order to get attention. So ask yourself this question: Do you seek harmony in every situation, or do you seek to widen the differences and prove your righteousness?

#5 Know That You Have More Love Than You Deserve

You should always feel that you are not worthy of the love that you receive. Think that the love you receive is much more than what you deserve. If you come from this space of humility, then you will behave with magnanimity and dignity in all your dealings. You won’t chew on the past, and you will live in the present moment, you will honor the other’s opinions, you will understand the other’s predicaments; that magnanimity will come from within.

If you keep this in mind, that I don’t deserve this love, you will not demand love. And when you don’t demand love in your life, it keeps on increasing.

#6 Leave Some Room for The Other to Give

Relationship means adjustment, it is giving. But at the same time, leave some room for the other partner to give. This needs a little skill - to make the other also contribute without demanding. If you demand, the relationship is not going to last

Meet Gurudev During HIS 2022 US Tour

Gurudev Sri Sri Ravi Shankar Ji takes the #IStandForPeace movement to the #unitedstates 


Catch the #event in a city near you 

#Hollywood #Miami #NewYorkCity #Boston #Washington and many more...


https://t.co/Gohm6Y8N1G


#Meditation #UnlockHappiness #follow https://t.co/tpfvSW5OYY

 

Tuesday, January 10, 2017

ஜல்லிக்கட்டு குறித்து வாழும்கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் கருத்து

#ஜல்லிக்கட்டு குறித்து #வாழும்கலை அமைப்பின் நிறுவனர் #குருதேவ் #ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் கருத்து 

Friday, March 18, 2016

யமுனையில் ஒரு கும்பமேளா

தேவலோகம்
சொர்க்கம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மட்டுமே பார்த்த நமக்கு தேவலோகத்தை சொர்கத்தை காட்டிய பெருமை சொர்கத்திலே மூன்று நாட்கள் தெய்வத்தோடு வாழவைத்த பெருமை வாழும் கலையின் நிறுவனர் குருஜி ஸ்ரீஸ்ரீ அவர்களையே சாரும்.155 நாடுகளை சேர்ந்த 35 லட்சம் மக்களை எந்த வித பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் 3 நாட்கள் ஒரே இடத்தில் சேர வைத்த இருக்க வைத்த  பெருமையும் குருஜி அவர்களையே சாரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.முதல் நாள் முதல் மூன்றாம் நாள் முதல் எத்தனை எத்தனை வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் உலக நாடுகள் முழுவதும் இருந்து வந்த லட்ச கணக்கான மக்களை தலைவர்களை மகிழ்விக்க ஆயிர கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் என திருவிழா கோலம் பூண்டது நமது தலை நகர் டெல்லி.எந்த ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் அதற்க்கு கடவுளின் ஆசிர்வாதமும் குருவின் ஆசிர்வாதமும் அவசியம் . அப்பேற்பட்ட மகிமை பொருந்திய  அந்த குருவே ஏற்பாடு செய்த இப்பேற்பட்ட உலக வரலாற்று மிக்க சிறப்பு நிகழ்வுக்கு இயற்கையின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்காமல் இருக்குமா அதுவும் கிடைத்தது  மழையின் ரூபத்தில் இயற்கையும் கடவுளும் குருஜி மீது மழையாக பெய்து  தங்கள் ஆசிர்வாதத்தை கொடுத்து இத்தனை புனிதமான ஒரு நிகழ்வுக்கு மேலும் புனிதத்தை சேர்த்தது ஒரு அறிய நிகழ்வு.அத்தோடு நிற்கவில்லை ஒவ்வொரு நாளும் உலகநாடுகளில் இருந்து வந்த கலைஞர்களின் கண்கவர் நிகழ்சிகளை பார்க்க கடவுளே வானவில்லாக வந்து பூமியிலே நடக்கும் இப்பேற்பட்ட விட விதமான வண்ணங்களுக்கு இணையாக வானத்தில் வானவில் தோன்றி பூமியும் வானமும் வண்ண மயமாக கட்சி அளித்தது மற்றுமொரு அறிய நிகழ்வு.ஒரு நாட்டில் இருந்து கொண்டு அவரவர் கலாசாரமே தெரியாமல் எத்தனையோ கோடி மக்கள் இருக்கும் போது, உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய  அரிய கலாசார நிகழ்வுகளை ஒரே இடத்தில் அதுவும் நம் இந்தியாவின் தலை நகரத்தில் எந்த வித சிறு அசம்பாவிதமும் இல்லாமல்  நடத்திய பெருமையும் குருஜி அவர்களை மட்டுமே சாரும்.
பொதுவாகவே மனித இயல்பு எந்த ஒரு நல்ல நிகழ்வுகளையும் கெடுக்கவேண்டும் நடக்கவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு .இந்த அற்புதமான நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ள பட்டன இயற்கையை சீரழித்து விட்டார்கள் ஒரு புகாரும் தரப்பட்டது.அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை இயற்கையை இயற்கையாக இருக்க வேண்டும் என்று குருஜி அவர்கள் உலகம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தனை எத்தனை என்று.அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் எத்தனை எத்தனை என்று.இந்த உலக கலாசார விழாவை இந்தியாவில் நடத்தி ஒட்டு மொத்த நாட்டிற்கும் எவ்வளவு பெருமையை தேடி தந்துள்ளார் என்பது சிறிது யோசித்து பார்த்தால் மட்டுமே தெரியும். 500 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சாதாரண திருமண நிகழ்விர்க்கே எத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு எத்தனை வேலைகளை செய்யவேண்டும். ஆனால் இப்பேற்பட்ட அரிய நிகழ்விற்கு உலக தலைவர்கள் அனைவரையும் வரவைத்து உலகம் முழுவதும் 35 லட்சம் மக்களை ஒரே இடத்தில் இருக்க வைத்து .பல்லாயிர கணக்கான இசை கலைஞர்களை  இது வரை யாருமே பார்க்காத கலைகளை இங்கே நிகழ்த்தி இப்பேற்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் காண கிடைக்குமோ ??????? இந்த ஒரு அரிய நிகழ்விற்கு  பின்னால் எத்தனை பேர் தங்களின் உடல் உழைப்பை கொடுத்திருப்பார்கள். இது நடந்து முடிந்த பின்னர் என்னக்கென்ன  என்று செல்லமால் அந்த இடத்தை தூய்மைபடுத்த குருஜியே  நேரில் சென்று அணைத்து ஏற்பாடுகளையும் செய்து உடனடியாக அந்த இடம் சுத்தம் செய்ய நடவடிக்கைகளையும் செய்துள்ளார் என்றால் அவரது எண்ணம் எப்பேற்பட்டதாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்களும் அரசியல் மற்றும் அனைத்து மதத்தலைவர்களும் குருஜி அவர்களை போற்றுகின்றனர் வரவேற்கின்றனர் அவரின் அறிவுரையை கேட்கின்றனர்.

ஜெய் குருதேவ்.
குருமூர்த்தி
சென்னை
9710282282



Monday, September 28, 2015

நடிகர் சந்தானம் அவர்களின் வாழும் கலை பயிற்சி அனுபவம்

Famous ‪#‎Tamil‬ Actor Sri. Santhanam Shares his ‪#‎ArtofLiving‬‪#‎SudarsanKriya‬ Experience in the presence of Gurudev H H Sri Sri Ravi Shankar at Art of Living International Ashram
 நடிகர் சந்தானம் அவர்கள் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பெங்களூரில் உள்ள வாழும் கலை அமைப்பின் சர்வேதேச ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும்  வாழும் கலை பயிற்சியில் உள்ள சுதர்சன கிரியா மூலம் கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த காணொளி இதோ 




Tuesday, August 4, 2015

பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் அரசு மதுபான கடை மூடப்பட்டது





ஆன்மீக தலைவர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும்கலை அமைப்பின்  தொண்டர்கள் மற்றும்  கிராம மக்களின் தொடர் அமைதி போராட்டத்தின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள  அரசு மதுபான கடை நேற்றிரவு மூடப்பட்டது.  இந்த புரட்சிக்கு உறுதுணையாக இருந்த கிராம பஞ்சாயத்து தலைவி திருமதி.காந்திமதி அவர்களுக்கும் பொள்ளாச்சி வாழும் கலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அரசு, வாழும் கலை ஆசிரியை திருமதி கவிதா அரசு  மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Sunday, July 26, 2015

இசை கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

வாழும் கலையின் 35 வது ஆண்டு விழா  இந்தியாவின் தலைநகர் டில்லியில் 2016 ம் வருடம் மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய திகதிகளில் "உலக கலாச்சார சார திருவிழா " (World Culture Festival ) என மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனாதிபதிகள் , பிரதமர்கள் , அமைச்சர்கள் ,தூதுவர்கள் , பல்சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்  என 50 இலட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதில் மிக பிரம்மாண்டமான மேடையில் 15000 இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்திய பாரம்பரிய இசையை இசைக்க   இருக்கிறார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போகும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் இசை கலைஞர்கள் கீழ் கண்ட எண்களிற்கு தொடர்பு   கொள்ளவும். டெல்லி  சென்று வருவதற்கும் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்

1RAJI SWAMINATHAN - CHENNAI 9884017767
2 SRINIVASAN - CHENNAI 9444406113
3 ARAVIND SOUNDARAJAN - CHENNAI 9677164072
4 SASIREKHA VENGATESH - COIMBATORE 9842236181
5 KARUNYA - COIMBATORE 9488075555
6 MANIKANDAN - NAGARKOIL 9894320282

25 லட்சம்  பேர் கலந்து கொண்ட வாழும் கலை அமைப்பின் 25வது ஆண்டு விழா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற 30வது ஆண்டு விழா காணொளி

Sunday, June 28, 2015

கொலம்பியா நாட்டில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அமைதிக்கான நடவடிக்கைகள்

H H Sri Sri Ravi Shankar பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆலோசனைப்படி கொலம்பியாவின் போராளி குழு FARC தலைவர் இவான் மார்கிஸ் வன்முறையை கைவிட்டு காந்தியின் அஹிம்சை வழியில் போராட முடிவு

Thursday, June 25, 2015

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது 
இந்திய ஆன்மீக தலைவர் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயர்ந்த சைமன்  பொலிவர்  விருது வழங்கப்பட்டுள்ளது

சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கை, போர் காலங்களில் மத்தியஸ்தம் மேலும் யோகா  மற்றும் மூச்சு பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து வன்முறைக்கு எதிராக போராடுவது ஆகிய செயல்களுக்காக
அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது . கொலம்பியாவின் ஜனாதிபதி அனுப்பி உள்ள கடிதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சேவை அங்கீகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இந்த விருதை பெற்றதற்காக பாராட்டு தெரிவித்துள்ளார்

Wednesday, June 3, 2015

ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின் ஆயுர்வேத மருத்துவமனை

ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின் 
ஆயுர்வேத மருத்துவமனை 

வாழும் கலை அமைப்பு இராக் நாட்டிலுள்ள குர்திஸ்தானில் தனது முதல் ஆயுர்வேத சிகிச்சை  மையத்தை ஜூன் 2ம் திகதி துவங்கியுள்ளது. குர்திஸ்தானின் சுகாதார அமைச்சர் திரு.  ரிகோட் ஹமாஹ் ராசிட் இதனை துவங்கி வைத்தார் 

வாழும் கலை அமைப்பின் சகோதர அமைப்பான சர்வேதேச மனித பண்புகள் அமைப்பின் இயக்குனர் திருமதி மாவாஹிப் ஷைபானி ஈராக்கில்  கூறும்பொழுது " ஆயுர்வேத சிகிச்சை முறையை  ஈராக்கில் அறிமுகபடுத்துவதன் மூலமாக , ஈராக் மக்களுக்கு ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க உதவுகிறோம் . இந்த சிகிச்சை  அவர்களுக்கு  உடல்,மனம்  மற்றும் ஆன்ம நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் "

ஆயுர்வேத சிகிச்சை முறைகளான பஞ்சகர்மா , மர்மா, அபயங்கா , நாடி பரிசோதனை மற்றுமல்லாது மூட்டு, தண்டுவடம் இவைகளுக்கான சிகிச்சையும் இந்த மையத்தில் வழங்கப்படும். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையை  சேர்ந்த மருத்துவர் திரு.விஷ்ணு பிரசாத்  மற்றும் இரண்டு பிணி  நீக்கும் வல்லுனர்களும் இணைந்து இராக் மக்களுக்கு தேவையான சிக்ட்சைகளை இந்த மையத்தில் அளிப்பார்கள் 

மன அழுத்தத்துடன் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகாவும் நல்ல மாற்றத்தை  தரும் என மருத்துவர் திரு.விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.


Tuesday, March 10, 2015

வாழும்கலை அமைப்பின் தமிழ் இணைய தளம்



வாழும்கலை அமைப்பின் தமிழ் இணைய தளம் 
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 09.03.2015 அன்று  துவக்கி வைக்கப்பட்டது.

Wednesday, February 18, 2015

வரும் பிப்ரவரி 24 முதல் நாகர்கோவிலில் வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சி

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அருளிய வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Tuesday, January 20, 2015

நாகர்கோவிலில் வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சி

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அருளிய வாழும் கலை அமைப்பின் " ஆனந்த அனுபவம்" பயிற்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 

Tuesday, January 13, 2015

Art of Living hosts largest symphony of 5378 flautists for peace

13 January 2015.  The Art of Living hosted a historic symphony - Venunaad- in Nashik , bringing 5378 flautists together on one platform, to write a new chapter in the history of music.

The  event aimed  to reinforce the power of music to spread peace and happiness, was attended by 5 lakh people. Capturing the confluence of spirituality with music, the evening was a triumph of the brilliance of Indian classical music and a spectacular demonstration of this ancient legacy of India.

Inspired by Sri Sri, the event saw the flautists perform under the guiding baton of renowned flautist, Pt. Ronu Mazumdar, while the revered  exponent of the instrument, Pt. Hariprasad Chaurasia, was the guest of honour.

Speaking on the occasion, Sri Sri said, “Music is a very important part of our life. A child learns language afterwards, but first learns to make sounds. Today, when there is tension, depression, and terrorism, it is time that we wake up and awaken the humanness that is deeply embedded within us. “

Throwing light on the significance of the event, he said, ”A sign of an intelligent one is one who spends time in discussing knowledge, music. It has been a tradition since the times of rishis. We have seen life in totality. We have taken knowledge, music, devotion together. Only India can send the message of peace to the world.”

 As a testimony to our multi-ethnic heritage and cultural vitality, flautists from all walks of life came together in this celebration of unity and harmony. These included artistes aged 5 -75 years of age.

 The flautists perched on a mammoth 30,000 square feet stage enthralled the audiences with the soothing melodies, based on rag yaman.  The soulful evening got a special touch when the legendary maestro Pt. Hariprasad Chaurasia and Sri Sri joined the musical celebration with their flutes during the concluding ceremony which ended with the symphony of ‘Vande Mataram’

Present at the event, were numerous dignataries, politicians and businessmen. Sri Sri encouraged the citizens of Nashik to clean the three rivers  - Godavari, Kapila, and Nasradi. He also urged the central and state government to treat river rejuvenation as an emergency.

Venunaad is the latest in a symphony-series hosted by The Art of Living. The organization has always  made sincere efforts to increase awareness about Indian Classical music in India and around the world and to epitomize the universality & unifying power of music to spread the message of peace and harmony. Coming from different sections of society, artistes have performed together in previous concerts like: • Naadha Vaibhavam - 5,000 Carnatic musicians performing in unison in Chennai. • Antarnaad - 2,750 Hindustani classical vocalists in an enchanting spectacle in Pune. • Brahm Naad- 1,094 sitar artistes from across the country in New Delhi. • Silver Jubilee celebrations of the Art of Living - 3,500 musicians performing together for the first time in Bangalore.

The event was a part of Sri Sri’s two-day tour of Maharashtra, titled ‘Sounds of peace’.

On 11th Jan , SriSri led 3 million people worldwide with ‘Chants for Global Peace and Happiness' at MMRDA grounds, Mumbai. Transport Minister, Nitin Gadkari, Education Minister, Vinod Tawde, MP Arvind Sawant, Social worker and politician Shaina NC  were also present at the event. This unique event was an earnest endeavour by The Art of Living to promote peace and harmony at a time when the world is grappling with fear, turmoil and despair.


Jaigurudev
தங்க தமிழ்நாடு 
THANGA TAMILNADU Official Theme Song #ArtOfLiving Social Welfare in TN

Watch, Like & Share to All

Sunday, August 25, 2013

தமிழ்சங்கமம் 2013 - குருஜி பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடனான கேள்வி பதில்


தமிழ்சங்கமம் 2013

      ஆகஸ்ட் -17.ல்  - வாழும்கலை பெங்களூரு  ஆஸ்ரமத்தில் நடந்த தமிழ்சங்கமம்  2013 நிகழ்ச்சியில் குருஜி பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடனான  கேள்வி பதில் உரையாடல்

எழுத்துருவம் : திரு பிரகாசம் அவர்கள்

கேள்வி(அருட்தந்தை திரு.பெலிக்ஸ் அலெக்சாண்டர்):

நான் பத்து வருடங்களாக வாழும் கலை பயிற்சி செய்துகொண்டுவருகிறேன் .எட்டு வருடங்களுக்கு முன் தங்களை  பெங்களூர் ஆஸ்ரமத்தில் சந்திக்கும்  பெரும் பாக்கியம் கிடைத்தது. மிகப்பெரிய ஆன்மீகவாதியான தாங்கள், மிக எளிமையாக பொறுமையாக  என்னோடு பேசிய கணங்கள் மறக்க முடியாது. ஆன்மீகவாதியாக உங்களை ஒதுக்கிக்கொள்ளாமல் ,சமூக காரியங்களுக்காக ஈடுபடும் தங்களின் பாங்கு பெருமைப்படத்தக்கது.தங்களிடம்  ஒரு கேள்வி .

ஒவ்வொரு மதமும்  சந்திக்கக்கூடிய  பிரச்சினை  அது அரசியலுடன் ஓட்டுவங்கியை  பெருக்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்டு, மதம் என்றால் வன்முறை ,தீவிரவாதம் என்று தவறாக பார்க்கும் நிலை வந்துவிடுமோ என பயம் வருகிறது. எப்படி இதை சரி செய்வது?

குருஜி: நீங்கள் சொல்வது  நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி நடப்பதால்தான் நம் நாட்டில் மதத்தின் மீது வெறுப்பு  உண்டாகிறது. ஆனால்,நம் நாடு ஆன்மீகத்தில் பலமாக இருப்பதால்  நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்  அரசியலையும் மதத்தையும் தனித்தனியாக வைக்கமுடியும்

இலங்கைத்தமிழர்  துயரம் நீங்க என்ன செய்யலாம்?

குருஜி:இலங்கைத்தமிழர் நிறையத் துன்பத்தை அனுபவித்திருகிறார்கள். அவர்களுக்கு  ஒரு ஆறுதலும்  புத்துணர்ச்சியும்  அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையும் கொடுக்கவேண்டும் . இதற்கு  எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்வோம்.

கேள்வி: நலிந்துவரும் மனிதநேயத்தை  வளர்ப்பது எப்படி?

குருஜி:ஆன்மீகத்தால்தான் முடியும்.மனிதநேயம்  ஆன்மீகமில்லாது வளர முடியாது. நான் யார்? என்பதும், உலகம் என்ன? என்பதும் தெரிந்துகொள்வதே ஆன்மீகம்.இந்த கேள்விகள் நம்முள் தொடர்ந்து வந்தால்  நமக்குள்  ஆன்மீக நிலை பெருகும்.மனதில் நிம்மதிவரும். நிபந்தனையற்ற அன்பும் பரந்த மனப்பான்மையும் உண்டானால் மனிதநேயம் தானாக வரும்.பரந்த மனப்பான்மையுண்டாக  என்ன செய்தாலும்  அதன் பெயர் ஆன்மீகம்.பயமில்லாது எல்லாரையும் நேசிக்கும் தன்மை வேண்டும்.

கேள்வி:    பூஜையின்போது இஸ்லாமியரும் உங்களை அன்போடு வணங்குவதைப் பார்த்தேன். எப்படி அது சாத்தியம்?
குருஜி:  அன்புக்கு மதமில்லை.உண்மைக்கு ஒரு மதமில்லை;.ஒரு குலமில்லை.; கோத்திரமில்லை; .சாதியில்லை. .அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ  அதைச் செய்கிறார்கள். நான் எப்போதும் எதையும் செய்யுங்கள் என்று சொன்னதில்லை. அவர்கள் செய்வது இறைவனாகக் கொடுத்த எண்ணம். வணங்குகிறவர்கள் தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறார்கள். யாரை வணங்குகிறோம் என்பது முக்கியமில்லை. நம் நன்றியை தெரிவிக்கவே  வணங்குகிறோம். தூணிலும் துரும்பிலும்  இருக்கும் எம்பெருமானை வணங்குகிறோம். எங்கு யார் என்பது  முக்கியமில்லை.;.வணங்குவதுதான் முக்கியம்.

கேள்வி:  (வீரகேசரி பத்திரிக்கை ஆசிரியர்  திரு.தேவராஜன்.)  நீங்கள் மதவாதியல்ல.  மதம், மொழி  கடந்தவர்..உலகின் அனைத்து  பகுதியுள்ளும் வாழும் இந்து மக்களை ஒன்றிணைக்கும்  இந்து உலகப்பேரவை  என்ற அமைப்பை   ஆரம்பிக்க முன்வர வேண்டும் . அப்போதுதான்  இந்து மதம்  வளர்ச்சியடைந்து தழைதோங்க உதவும்    அது அரசியல், மொழிகடந்ததாக இருக்கவேண்டும். இதில் உங்கள் நிலை என்ன?

குருஜி:  உங்கள் எண்ணம சரிதான்.  இந்து மதம்   சாதி சாதியாக பிரிந்து  சிதறி கிடக்கிறது. எல்லாரையும் சேர்த்து அணைத்து  எம்மதமும் சம்மதம்  என்ற எண்ணம்  வரவேண்டும். இந்து மதத்தை காப்பாற்ற எல்லாரும்    முயற்சி  செய்ய வேண்டும். இந்து மதத்தின் கசடுகளை  நீக்கி  சாதி விளக்கி, ஒரே சாதி மனித சாதி .யான்பெற்ற இன்பம் எல்லாரும் பெறட்டும் என்ற   கொள்கையை நிலை நாட்டவேண்டும் .எல்லா இளைஞருக்கும் இதில் பொறுப்புண்டு .இந்துமதத்தில் ஊறுகாய் மாதிரி  இருக்கவேண்டியது உருவ வழிபாடு .மனிதத்தன்மை  வேண்டும்.உருவவழிபாடும் வேண்டும் ஆன்மீகமும் வேண்டும். அருட்பெரும் ஜோதி ! தனிப்பெரும் கருனண!  .தமிழகத்தில்  உள்ள கோவில்கள், சிலைகள் , கலாசாரம் உலகில் வேறெங்கும் இல்லை . தமிழகரசின்  சின்னம்கூட கோயிலின் கோபுரம்தான்.  கோயில்களையும் கப்பலையும்(நாவாய்) உலகிற்கு முதழில் கொடுத்தது தமிழகம்தான்.

கேள்வி: தமிழக அரசியல்வாதிகள்  தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் நிலை எப்போது மாறும்?

குருஜி: அது ஒரு விதமாக மாறிவிட்டது என்றே நினைக்கிறன் ஜனநாயகம் என்றால் மாற்றம் இருக்க வேண்டும். ஊழல்  ஒழிய  மாற்றம் கொண்டுவர இளைஞர்கள்  முன்வரவேண்டும்.மியரும்

கேள்வி: குருஜி தங்களின் நிறைவேறாத ஆசை இருந்தால் சொல்லுங்கள் . நான் நிறைவேற்றுகிறேன்

குருஜி: நம் மக்கள் முகத்தில் புன்னகை வர  ஆசைப்படுகிறேன்




கேள்வி :குடும்பத்தில் எப்படி எல்லோருடைய  பிழைகளையும் சகித்துக்கொண்டு  அனுசரித்து போவது எவ்வாறு?
குருஜி:குடும்பம் என்றால்  பலவித மனிதர்கள்  இருப்பார்கள். பல எண்ணங்கள்  இருக்கும். எல்லோரையும் சேர்த்து  அநுசரித்து  போவதற்கு  பரந்த மனப்பான்மை வேண்டும் ,பொறுமை வேண்டும், மற்றவர்களை  புரிந்து கொள்ளும்  தன்மை வேண்டும். இதற்கு  தியானம்  செய்துவந்தால்  எல்லாம் சாத்தியம் ஆகும் . .மற்றவர்களை  புரிந்துகொள்ளாவிட்டால் தகராறுதான் வரும். அவர்களும் மாற கொஞ்ச காலம் தேவை. பால் தயிராக  சில மணி நேரங்கள்  ஆகும். தயிர்  வெண்ணையாக  சில மணி நேரமாகும். அதுபோல  மனிதர்கள்  மாறுவதற்கும் கொஞ்ச காலம்  பொறுத்திருப்போம் .
கேள்வி: மனிதனின் பரிணாம வளர்ச்சியில்  குருவின் பங்கு என்ன?
குருஜி:  ரசம் செய்ய  தண்ணீரின் பங்கு என்ன என்று கேட்டால் எப்படி சொல்ல? தண்ணீரின்றி  ரசம் செய்ய முடியுமா?
கேள்வி:காமத்தை தியானத்தால்  கட்டுப்படுத்த முடியுமா?
குருஜி: பிராணாயாமத்தால்  நிச்சயம்  கட்டுப்படுதமுடியும்.


கேள்வி :மரணத்தை வெல்வது எப்படி?
குருஜி: நம் நிழலை  அழிப்பது எப்படி என்று  கேட்கிறமாதிரி இருக்கிறது.நம் நிழலை அளிக்க முடியுமா? முடியும். நம்மை சுற்றி  ஒரு ஒளி  இருந்தால் நிழல் இருக்காது.அதே மாதிரி  ஞானத்தால்  மரணத்தை வெல்லமுடியும்.  உடலுக்கு மரணம் வந்தே தீரும். எனக்கு (ஆன்மாவிற்கு ) மரணம் இல்லை என்பதை ஞானத்தால் உணர முடியும்.உடலில் இருக்கும் நோயை குறைத்து ஆயுளை விருத்தி செய்யலாம். அதற்கு சித்தா , ஆயுர் வேதா  வைத்தியம்  உண்டு. தமிழகத்தில்  மிகச்சிறந்த சித்தா மருத்துவ முறையை   மூடி வைத்திருக்கிறோம் .யாரும் அதிகம் கண்டு கொள்வதில்லை. எல்லோரும் அதை பயன்படுத்த வேண்டும். உலகில் மிக உயர்ந்த ஸ்தானம்  பெற்றிருக்கும்  ஆயுர்வேத மருத்துவமும் பல உடல் நோய்களை    குணமாக்கும் தன்மையுடையது. அங்கு உடல் சரி செய்யப்படுகிறது. இங்கு வாழும் கலையில் மனம் சரி செய்யப்படுகிறது. ஆன்மா சரியாக உள்ளது..

கேள்வி:சைத்தன்யம் என்றால் என்ன?

குருஜி:எதனால் கேள்வி கேட்கிறீர்களோ , எந்த உயிரால்  நான் சொல்லும் பதிலை க்ர்த்கிரீர்களோ  அதுவே சைத்தன்யம். சைத்தன்யம்  இல்லையென்றால்  கேள்வி கேட்கமுடியாது. நான் சொல்லும் பதிலை கேட்கவும் முடியாது.

கேள்வி:  உடல் எடை குறைக்க முடியுமா?
குருஜி: நிச்சயம்   குறைக்க முடியும். லிவிங் வெல்   பயிற்சியில்  கலந்து கொள்ளுங்கள்.

கேள்வி: சரியாகச் சொல்லுங்கள்.  நாம் எங்கே போகிறோம்? எங்கே வழி நடத்துகிறீர்கள்?

குருஜி: எங்கே போகணுமோ   அங்கேதான் போய்க்கிட்டு இருக்கிறோம் . எங்கே போகக்கூடாதோ  அங்கெ போகாமல் தடுத்துக்கிட்டிருக்கிறோம். கவலையே வேண்டாம்  நம்ம ரயில் நன்கு  தண்டவாளத்திலேயே  ஓடிக்கொண்டிருக்கிறது.

கேள்வி:ஆசை என்னும் பேராசையால்  வாழ்க்கை  தடைப்படுமா?

குருஜி:வாழ்க்கையில் சின்ன சின்ன ஆசைகள் இருக்கட்டும்.ஆனால்  அது பேராசையாக வேண்டாம். பேராசையால் பெருந்துன்பம் வந்து சேரும்.  அதற்குப்பதில்   பெரிய ஆசை  இருக்கட்டும்.


கேள்வி: ஏசுபிரான்  சிலுவையில் அறையபட்டபோது   "பிதாவே எனது ஆவியை  உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் "  என்று கூறியது பற்றி  என்ன சொல்கிறீர்கள்?

குருஜி: ஏசு பிரான்   வாழ்கையின் சாரமே அன்பு தான் .  நானும் பிதாவும்  ஒன்றே  என்பதே   அதன் அர்த்தம. வேதங்களும் "நானும் பிரம்மாவும்  ஒன்றே " என்கிறது. உண்மை ஒன்று. உலகம் ஒன்று. கடவுள் ஒன்று.



கேள்வி: நீங்கள் விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். அப்படியானால் நாங்கள் யார்? எதனால் இந்த பிறப்பு?

குருஜி: நான் யார்? நீங்கள் யார்? எனக்கேட்க வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றுதான். நான் வேறு நீங்கள் வேறு அல்ல . நான் உங்களின் அம்சம் .நீங்கள் என்னுடைய அம்சம் நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.அவ்வளவுதான்.

கேள்வி:யோகவஷிச்டத்தில்  பிரம்மா,விஷ்ணு,சிவா  என மூவர் பற்றியும்  சங்கல்பா  பற்றியும்  சொல்லியிருப்பது குழப்பமாக உள்ளதே?

குருஜி: யோகவஷிச்தம்  மிக ஆழமான  பொருள் பொதிந்த ஞானம. முதலில் படித்தால் குழப்பம் வரும்.பழைய  ஞானங்களை  உடைத்தெறியும். புதிய ஞானம பிறக்கும்  ஆனால் நிறைய தடவைகள் படித்தால்  மட்டுமே உண்மை உணர முடியும். இது உயர்ந்த கணித சூத்திரம் மாதிரி. ஆங்கிலத்தில் கூட இன்செப்ஸன் , மாட்ரிக்ஸ்   போன்ற  பெரிய  திரை படங்கள்  யோகவஷிச்தத்தை  அடிப்படையாக கொண்டே  உருவாகப்பட்டுள்ளன. அது ஆழ்ந்த மெய்யுணர்வை  அடிப்படையாக கொண்டது.ஒரு தடவை படித்தல் புரியாது.

கேள்வி:மனது எங்கே இருக்கிறது?

குருஜி; மனது உடம்பில் எங்கே இருக்கிறது என் ஆராய்ச்சி செய். தலையா?மூளையா? இதயமா? பரிசோதனை செய்துபார்.  

Monday, March 25, 2013

இலங்கை கொக்குளாய் பகுதியில் வாழும் கலை

இலங்கை கொக்குளாய் பகுதியில்  மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது 

























இலங்கை கொக்குளாய் பகுதியில்  மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது 

இலங்கை முள்ளி வாய்காலில் வாழும் கலை

இலங்கை முள்ளி வாய்காலில் மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது