Thursday, February 24, 2011

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்​

*நண்பர்களே!!!*
தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால்
லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே
பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர
குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம்
என்கிறார்
முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க
வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை
துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு
செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும்
நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து
வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக்,
ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து
விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும்
குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது
ஏழைகள்
பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா?
மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின்
பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு
குறிப்பிடுகிறேன்.
1999ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று
வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே
நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்
நுட்பவளமான 1G அல்லது 2G
அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால்
உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து
உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In
Coming and Out Going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க
வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று
இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள்
விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை
தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின்
எண்ணிக்கை
அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின்
எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள்
அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60
கோடிதான்.
122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால்
என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும்
இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த
குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ்
போன்ற பெரிய
நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத
நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
*நியாயக் கணக்கு:*
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.
எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு
நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY)
பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60
கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு
மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600
கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது.
அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200கோடிகள். இது ஒரு நாளைக்கு
வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு
கிடைத்திருக்கும் வருமானம்.
இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும்
என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15
நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி
கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால்
கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி
காண்பிப்பது"INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால்
அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை
குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க
வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும்.
அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று
அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே
தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle cl-ass"
மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை
மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு
மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக
ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு
தூக்கில் போடப்படும்.
*துரோகம்-1:*உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000
கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு
வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300
,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
*துரோகம்-2:*பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி
நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு
அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி
மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
*துரோகம்-3:*தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில்
பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech"
போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை
தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய
நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது
கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி
லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில்
பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை
இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL <http://s.tel/>"  போன்ற போட்டி
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
*துரோகம்-4:*MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில்
அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும்
கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால்
பயன் அடைந்து இருப்பார்கள்.

*துரோகம்-5:*தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள்
தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான்
போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த
நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக
பெரிய அச்சுறுத்தல்.
*துரோகம்-6:*நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG  தொலைதொடர்பு
சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள்
புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு
இப்படி கோடி கணக்கில்
ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று
முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை.
அதிலும் முறைகேடு.
*துரோகம்-7:*இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம்
செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில்
ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.

*துரோகம்-8:*நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய்
மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
*துரோகம்-9:*ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள்
பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய
நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு
வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள்,
மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்
என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள்
என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத
மக்களை கண்டிருக்கலாம்.
*துரோகம்-10:*ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற
இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு
விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து.
ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு
செய்யப்பட்டுள்ளது.
ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட
சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான்
ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம்
உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும்
நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும்.
எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு
அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே
இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க
முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள்
எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து
அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து
அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக
மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை
மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும்
ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம்
ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக
திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர்.
இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு
பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும்
உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின்
வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில்
இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail,
FAX , Facebook , orkut என்று எவ்வளவோ
தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு
செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை
செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி

Tuesday, February 8, 2011

வாழும் கலையின் தமிழ் வேத வேள்வி Monday, 07 February 2011 09:25


வாழும் கலையின் தமிழ் வேத வேள்வி


"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'
என திருமந்திரம் செப்பும் "குரு இல்லா வித்தை பாழ்' என்பர் எம்மூத்தோர்.அறியாமை இருளை நீக்கி மருளைப்போக்கி தெளிவை ஏற்படுத்துபவர் குரு ஆவார்.இந்து இலக்கியங்கள் அறிவைப்பெற குருவைநாடிச்சென்று தங்கியிருந்து சேவை செய்தல் வேண்டும் என கூறுகின்றன.
ஆனால் இன்று பூகோளமய மாயையில் சிக்கித்தவிக்கும் உலகமக்கள் தொழில் நுட்பத்துடன் போட்டிபோட்டு தம்மைப்பற்றி தாமே கவனிக்க நேரமற்று நவீன உணவுப்பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு மன,உள நோய்களுக்கு ஆட்பட்டு மிகவேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் ஆன்மீக தாகமோ தன்னம்பிக்கையோ அற்றுள்ள மக்கள் குருகுலத்தையோ குருவையோ நாடிச்செல்லும் நிலையிலில்லை.
இதனால் தான் நவீன வேதியல் விஞ்ஞானியும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஆன்மீக குரு பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலக மக்கள் அனைவரையும் நாடி தானே நேரில்சென்று சுதர்சன கிரியா எனும் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எளிய சுவாசப் பயிற்சியினை அளித்தும் தன்னார்வத்தொண்டர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பெருமாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றார்.
இவ்வகையில் மானிடநேயம் கொண்ட குருஜி தமது அமைப்பின் முப்பதாம் ஆண்டில் கடந்த 22.01.2011 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே அமைந்துள்ள மட்டக்களப்பு மண் ஆன்மீகத்திலும் சளைத்ததல்ல.நகரமத்தியில் பரந்து விரிந்து அந்த முற்றவெளி மைதானம்(வெபர்) அடுக்கடுக்காய் வானுயர்ந்த கம்பங்கள் சீரான இடைவெளியில் கம்பீரமாக காட்சியளித்தன வந்தாரை .வரவேற்க நந்திக்கொடிகள் தென்றலின் உதவியுடன் சிந்துபாடி சிரம் அசைத்தன.
பரந்து விரிந்த மைதானம் போல் ஆங்கே ஒரு மூலையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையும் பரந்து விரிந்தே காணப்பட்டது.மேடையின் நடுவே அழகிய வெண்பதாகை ஒன்று உலக சமாதானம் மற்றும் ஒற்றுமைக்காக 21,000 மக்கள் இணைந்து தேவாபாராயணம் எனும் செய்தியை பறைசாற்றிக்கொண்டிருந்தது.பதாகைக்குரிய சிவப்பு,வெள்ளை வண்ணத்தெரிவு,சூடு,குளிரைக் குறிப்பதும் சிவ,உமை தத்துவத்தை குறிப்பதுமாக இருக்குமோ என எண்ணத்தோன்றியது.
பரந்து விரிந்த இம்முயற்சிகண்டு அகமகிழ்ந்த வானம் மதிய நேரம் அண்மிக்கும் போது சிறு சிறு வெண்முத்துகளை சிந்தி வாழ்த்தியது.சிந்திய முத்துகள் பூதேவியில் தேங்கிடக்கூடாதென்று தொண்டர்கள் கூடி அகத்துறிஞ்சியால் ஒத்தடம் கொடுத்தனர்.அங்கிருந்த யாவர் மனமும் நிகழ்வு நடக்குமாவென அங்கலாய்த்தது.
அதிசயம்தான் “பிற்பகல் அண்மிக்கும்போது செங்கதிரோன் சிரித்து மகிழ்ந்தான்.மெல்ல மெல்ல மக்கள் மைதானத்தில் கூடினர்.மக்களை ஆற்றுப்படுத்த வெண்ணிற ஆடைகளுடன் தொண்டர்கள் ஆங்காங்கே காணப்பட்டனர்.வரிசை வரிசையாய் ஊர்திகள் அரங்கை நோக்கி அசைந்து வந்தன.இவற்றின் முன் கட்டப்பட்ட பதாகைகள் அவை கண்டி,ஹட்டன்,நுவரெலியா,திருகோணமலை,யாழ்ப்பாணம்,கொழும்பு,மன்னார்,பூநகரி,வவுனியா,வெல்லவாயா முதலிய பிரதேசங்களில் இருந்து வந்ததை அறிவித்தன.
மைதானம் அண்ணளவாக 50,000 மக்களால் நிரம்பி வழிந்தது.மெல்லென பி.ப.3 மணியை அண்மித்தது."குரு ஓம் பாடல் எமதுள்ளத்தை நிரப்பியவேளை குருஜியின் பிரசன்னத்துடன் வேதபராயணம் வானளாவ ஒலிக்க அந்தண சிவாச்சாரியர்கள் “மகாருத்ர'பூசையினை ஆற்றினார்கள்.இவ்வேளை ஐந்து கருடன்கள் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருந்ததை அடியவர்கள் தம்முள் பேசிக்கொண்டிருந்தனர்.
நூல்வேத சமர்ப்பணத்தை தொடர்ந்து "அங்கமும் வேதமும்'எனத் தொடங்கும் தமிழ் வேதமும் பாடசாலைப்பிள்ளைகள்,பக்தர்கள் என 21,000 பேர் ஒரு சேர ஒரே குரலில் பாராயணம் பண்ணியமை மனதை பண்படுத்துவதாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து உலகமாதேவியிடம் ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர் புறநீர்மை பண்ணில் இராமேஸ்வரத்திலிருந்து திருக்கோணேஸ்வரப் பெருமாள் மீது பாடியருளிய"நிரை கழலரவஞ் சிலம்பொலி அலம்பும்' எனும் தமிழ்வேதமும் திருவங்க மாலையிலிருந்து தலை,கண்,நெஞ்சு ஆகிய பாகங்கட்குரிய பாடல்களும் தமிழோசைபாடல் மறந்தடியேன் என்பதற்கிணங்க பாடப்பட்டமை பக்தி பரவசத்தினை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் பொதுமக்கள்,பாடசாலைப்பிள்ளைகள் மட்டுமன்றி அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது. திட்டமிட்டபடி காலதேசவர்த்தமானங்களை கடந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட திகதியில் குறிப்பிட்ட நேரத்தில் 21,000 மக்கள் ஒரே மேடையில் தேவபாராயணம் செய்தமை உள்ளத்தை உருக்குவதாகவே உள்ளது.ஆகையால் இதனை வாழும் கலையின் தமிழ்வேத வேள்வியெனில் அது மிகையில்லை

Friday, November 12, 2010

The Art of living - Beginnings Tamil


Dear Friends...Here is my First Art of living Video with Voice..Thank you so much Guruji for making to do this..

Saturday, October 30, 2010

Q & A with Sri Sri

Q: When there is intolerance around you, how to retain equilibrium?
Sri Sri: See life from a broad picture. See intolerance as a lack of education. That is one thing. Second is patience and perseverance.
Q: Do you get stressed?
Sri Sri:: The product really works well! (laughs) Just last week I went to Kerala. They had organised 19 appointments in a day. I cancelled some of them before I went there. Yet, I ended up attending 22 appointments. I thought I would get irritated, but I surprised myself and didn’t. Each one of us has tremendous energy within us. One single cell can light up the entire city of Bangalore for 24 hours.
Q: Where does Obama get his inspiration from?
Sri Sri: Today, the global problem is terrorism through wrong ideology. I feel that we need to emphasise a broad spectrum of education for the future generation. If each child knows about other religions,it won’t think other religions will go to hell. Even in India, madrassas are getting CBSE status because of the vote bank. I’m not saying all madrassas are bad but there is an 80 percent chance of narrowing vision. We need to have a long term goal and long term vision in everything. An education which has science and spirituality - head and heart is the only solution.

Q: What inspired you?
Sri Sri: In school I used to say I have family everywhere, I am going to go everywhere. Sometimes you get that gut feeling or inner premonition. My mother was my inspiration. She was so alert, so awake. She never made a mistake, never said sorry in her life - can you imagine!! Another inspiration was my teacher, who was associated with Mahatma Gandhi for 40 years. 

Q: How do I handle criticism?
Sri Sri: When someone criticises you, they are taking a risk. Who wants to take the risk of making enemies! When they are doing that, you appreciate them. Stand up to criticism. Also have the courage to criticise for their improvement. But if someone is criticising you out of jealousy, you smile, it is their problem.
Q: How do you ensure that conflicts, backbiting, politics doesn’t happen in your organisation?
Sri Sri: People are people wherever they are. I can count on my finger how many times I got angry - seven times maybe! If you fight, fight a new fight, don't fight the same fights! Intellectuals don't walk like sheep. They don't agree many times, they don't walk the same way. That is the fun. They should know how to de-stress themselves. Let out the steam, get into the team!! 

Q: You emphasise education. Yet, most problems are caused by educated people.
Sri Sri: When I say education, I don't mean only a degree from college. Unfortunately, in recent times, pride has got attached to aggression. If you lose your equanimity or calmness, it means something wrong. This shift from pride getting attached from aggression to non-violence must happen. 
Q: Do you have any goals?
Sri Sri: I just inspire people to set their own goals. 
Q: What are the two-three mistakes the organization has made. How has it learnt?
Sri Sri: Our biggest blunder is our first principle: ‘Accept people as they are’. I cannot reject anyone! Drug addicts, fools, riffraffs everyone comes. We can’t reject anyone and we lose a lot of time!! We cannot discard even the incorrigible. Second is we don't have a hierarchy - it becomes difficult to manage and track! Everywhere, people are starting on their own. Now after 28 years, we are streamlining.
Everyone is a spokesperson - that becomes difficult to control. During our Silver Jubilee, we had such a hilarious time. The program was mesmerising, but behind the scenes, every department was in a mess. 

Q: Are we getting too caught up in the negativity of today and forgetting the big picture that this will pass?
Sri Sri: There are natural calamities where we can wait and watch. But in manmade calamities, we can't afford to take that outlook. Change is not possible if you don't do that. For some things, we cannot be just fatalistic and say this will pass. 
Q: How does one make a balance between the heart and mind?
Sri Sri: Yes. You do your business with your mind, and service with your heart. In both cases, there is a third component - intuition. Never be with in the business with heart. With family, be with the heart, don't use your mind there. Do both with the gut feeling!

Friday, October 29, 2010